வால்பாறையில் மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு!

வால்பாறையில் நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி துவங்கி வைத்தார்.



கோவை: வால்பாறையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பில் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுத்தல் குறித்து நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி, நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



முன்னதாக வால்பாறை கலை கல்லூரியில் நகரங்களின் தூய்மைக்கான பணியை நகராட்சி தலைவர் அழகுசுந்தவள்ளி துவங்கி வைத்தார். 

கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.



பின்பு காந்தி சிலை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுத்து தூய்மை பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டும், நகரங்களை தூய்மையாக வைக்க வேண்டும், என்று உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...