கோவையில் விதிகளை மீறி பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் அகற்றம்!

கோவை மாநகரில் தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பொருத்தி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறி 12 தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களை போக்குவரத்து காவல்துறையினர் அகற்றி பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறி 12 தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்களை போக்குவரத்து காவலர்கள் அகற்றி பறிமுதல் செய்தனர். 

கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் “ஏர் ஹாரன்” பொருத்தி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. 

இதையடுத்து மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் மதிவாணன் உத்தரவின் பேரில், கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்து காவலர்கள் கண்காணிப்பை தீவிரபடுத்தினர். 

இதில் போக்குவரத்து விதியை மீறி அதிக அளவு ஒலி எழுப்பக்கூடிய “ஏர் ஹாரன்களை” பொருத்திய பேருந்துகளை கண்டறிந்து அந்த பேருந்துகளில் பொருத்தி பொருத்தியுள்ள ஹாரன்களை அகற்றி வருகின்றனர். 



அதன்படி கோவை காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்களுக்கு வந்த தனியார் பேருந்துகளை சோதனை செய்தனர். 



அப்போது, 12 தனியார் பேருந்துகளில் பொருத்திருந்த “ஏர் ஹாரன்களை” அகற்றி பறிமுதல் செய்தனர். ஏற்கனவே இது குறித்து போலீசார் எச்சரித்திருந்த நிலையில் மீண்டும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏர் ஹாரன் பொருத்தி பிடிபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்படும் எனவும் அதனை தொடர்ந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...