கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து ஏற்படும் பள்ளம் - வாகன ஓட்டிகள் அவதி!

கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட் அருகேயுள்ள சர்வீஸ் சாலையில் டி.இ.எல்.சி., பள்ளி எதிரே அடிக்கடி குடிநீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகும் நிலையில், நெடுஞ்சாலை தரப்பில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட் அருகேயுள்ள சர்வீஸ் சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டது. இதில், கிணத்துக்கடவு பகுதியில் கோதவாடி பிரிவு முதல் அரசம்பாளையம் பிரிவு வரை பாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது. கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனகள் சென்று வருகின்றன.

இந்நிலையில், டி.இ.எல்.சி., பள்ளி எதிரே அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அங்கு பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் நிரம்பியுள்ளது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

இந்த பிரச்னையை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில், மண் கொட்டி அவ்வப்போது சரி செய்யப்பட்டு வந்தது. ஆனால் மீண்டும் மீண்டும் குழாய் உடைந்து, சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த சாலையை தற்காலிகமாக சரி செய்யாமல், நிரந்தர தீர்வு கான தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் குழாய் தரமின்றி இருந்தால், புதிதாக மாற்றி அமைக்க வேண்டும், என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...