கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து ஏற்படும் பள்ளம் - வாகன ஓட்டிகள் அவதி!

கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட் அருகேயுள்ள சர்வீஸ் சாலையில் டி.இ.எல்.சி., பள்ளி எதிரே அடிக்கடி குடிநீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகும் நிலையில், நெடுஞ்சாலை தரப்பில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட் அருகேயுள்ள சர்வீஸ் சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டது. இதில், கிணத்துக்கடவு பகுதியில் கோதவாடி பிரிவு முதல் அரசம்பாளையம் பிரிவு வரை பாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது. கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனகள் சென்று வருகின்றன.

இந்நிலையில், டி.இ.எல்.சி., பள்ளி எதிரே அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அங்கு பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் நிரம்பியுள்ளது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

இந்த பிரச்னையை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில், மண் கொட்டி அவ்வப்போது சரி செய்யப்பட்டு வந்தது. ஆனால் மீண்டும் மீண்டும் குழாய் உடைந்து, சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த சாலையை தற்காலிகமாக சரி செய்யாமல், நிரந்தர தீர்வு கான தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் குழாய் தரமின்றி இருந்தால், புதிதாக மாற்றி அமைக்க வேண்டும், என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...