கோவை தெற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு - திட்டங்களையும் தொடங்கி வைத்தார்!

கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் நடைபெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் மற்றும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை: கோவை தெற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உலக சுற்றுச்சூழல்‌ தினத்தை முன்னிட்டு கோவை‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை தமிழகம்‌ திட்டம்‌, பொதுமக்களின்‌ தூய்மை நகரம்‌ திட்டத்தின் கீழ்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 5 மண்டலங்களுக்கும்‌ தலா 200 மரக்கன்றுகள்‌ வீதம்‌ 1000 மரக்கன்றுகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ வழங்கினார்‌.



கோவை தெற்கு மண்டலம்‌ வார்டு 87க்கு உட்பட்ட புட்டுவிக்கி பிரதான சாலையில்‌ ரூ.186 லட்சம்‌ மதிப்பீட்டில் 2200 மீட்டர்‌ தொலைவிற்கு தார்சாலை அமைக்கும்‌ பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌,



இதேபோல், கோவை‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.97க்கு உட்பட்ட பிள்ளையார்புரம்‌ பகுதியில்‌ ரூ.62 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ உயர்மட்ட பாலம்‌ கட்டுமான பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோவை‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.100க்கு உட்பட்ட மேட்டூர்‌ சாலை, நாச்சிமுத்து கவுண்டர்‌ வீதியில்‌ தமிழ்நாடு நிலையான நகா்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டம்‌ |||-ன் கீழ்‌ ரூ.24 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 405 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும்‌ பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...