திருப்பூர் நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் பரிசோதனை மேற்கொண்ட அமைச்சர் சாமிநாதன்!

தமிழகம் முழுவதும் 500 நகர்ப்புற நல வாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிலையில், திருப்பூரில் திறக்கப்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டார்.

திருப்பூர்: திருப்பூரில் உள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் 500 நகர்ப்புற நல வாழ்வு மையத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று துவக்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்டத்தில் 27 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் இன்று திறக்கப்பட்ட நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் நடைபெற்ற திறப்பு விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வரின் திறப்பு விழா நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு நகர்ப்புற நல வாழ்வு மையத்தை ஆய்வு மேற்கொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அங்குள்ள மருத்துவரிடம் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தையும் வழங்கினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...