மதுக்கரையில் சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

சத்துணவு அமைப்பாளர்களுக்கு உணவு ஊட்டச்சத்து செலவின தொகையை வழங்க லஞ்சம் தர மறுத்த இருவரை பணியிட மாற்றம் செய்த மதுக்கரை ஊராட்சி ஒன்றிய சத்துணவு திட்ட ஆணையர் கணேசனை கண்டித்து சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: மதுக்கரை ஊராட்சி ஒன்றிய சத்துணவு திட்ட ஆணையரை கண்டித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பிச்சனூர் அரசு பள்ளி அமைப்பாளராக பணியாற்றி வந்த சோமசுந்தரம் மற்றும் சுந்தராபுரம் செங்கோட்டையார் அரசு பள்ளி அமைப்பாளர் நாகமணி ஆகிய இருவரையும் மதுக்கரை ஊராட்சி ஒன்றிய சத்துணவுத் திட்ட ஆணையர் கணேசன் பணியிடமாற்றம் செய்துள்ளார்.

இந்த பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக உணவு ஊட்டச்சத்து செலவின தொகையை அமைப்பாளர்களுக்கு வழங்க சத்துணவு திட்ட ஆணையர் கணேசன், லஞ்சம் கேட்டதாகவும், அந்த லஞ்சத்தை தர மறுத்த சோமசுந்தரம் மற்றும் நாகமணி ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே உடனடியாக அவர்களது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சத்துணவு திட்ட ஆணையர் கணேசனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் வரும் 20 ஆம் தேதிக்குள் பணியிட மாற்றத்தை ரத்து செய்யவில்லை என்றால், அடுத்த கட்டமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

ஒன்றிய தலைவர் ஆனந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் நித்திய பிரியா, ஜெகநாதன் உள்ளிட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...