கோவையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது!

கோவை அன்னூரை சேர்ந்த முகமது அலிபகத் என்பவர் தனது வீட்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சொகுசு பைக்கை திருடிச்சென்ற அப்துல் ரகுமான் (21) என்பவரை கைது செய்த போலீசார் திருடப்பட்ட சொகுசு பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே சொகுசு பைக்கை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், அன்னூரை சேர்ந்தவர் முகமது அலி பகத். இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாது நபர் திருடி சென்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு அன்னூர் போலீசார் பதிவு செய்தனர். இந்நிலையில் அன்னூர் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பசூர் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதனால் அவரை காவல் நிலையம் அழைத்து விசாரித்த போது முகமது அலி பகத்-ன் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற இளைஞர் என்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர் அப்துல் மஜ்கார் மகன் அப்துல் ரகுமான் (21) என்பதும், இரு சக்கர வாகனத்தை திருடி விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...