துடியலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது!

கோவை துடியலூர் பகுதியில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்த மணிவண்ணன், சுதாகர், கிரண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார் 1.5 கிலோ கஞ்சா மற்றும் 4 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் நேற்று துடியலூர் சுற்று வட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் துடியலூர் சரவணம்பட்டி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது போதை பொருளான கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மணிவண்ணன், சுதாகர், கிரண் உள்ளிட்ட 3 இளைஞர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா, கஞ்சா ஆயில் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...