ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடி சாதனை படைத்த திருப்பூர் சிறுவன்!

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அதர்வா என்ற 3 வயது சிறுவன் அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடியுள்ளார். இதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சாதனையாக அங்கீகரித்து, சிறுவனுக்கு சான்றிதழும், பதக்கத்தையும் வழங்கி கௌரவித்துள்ளது.



திருப்பூர்: அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடி சாதனை படைத்துள்ள 3 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் தனபால் - ஐஸ்வர்யா தம்பதி. இவர்களுக்கு 3 வயதில் அதர்வா என்ற மகன் உள்ளார்.



இவர் குழந்தை பருவத்திலேயே பல திறமைகளுடன் வளர்ந்து வருவதை உணர்ந்து கொண்ட இவர்களது பெற்றோர் ஆத்திச்சூடி, திருக்குறள் போன்றவற்றை போதித்து வந்தனர். 



இந்நிலையில் அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடி சாதனை படைத்துள்ளார் அதர்வா. இதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனம் சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்துள்ளது. 



இந்த சாதனை அவர்களது பெற்றோருக்கும் மட்டுமின்றி திருப்பூருக்கே கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவனுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...