திருப்பூரில் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் நலம் விசாரித்த எம்.எல்.ஏ!

திருப்பூர் கோர்ட் வீதியில் வெறிநாய்க்கடியால் 3 சிறுவர்கள் உட்பட 15 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தொடர் சிகிச்சையில் உள்ள சிறுவர்களை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.



திருப்பூர்: திருப்பூரில் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

திருப்பூர் கோர்ட் வீதியில் உள்ள காவலர் குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு அங்கு தெரு நாய் கடித்ததில் மூன்று சிறுவர், சிறுமியர் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.

இதில் பெரியவர்கள் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மூன்று சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



அவர்களை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 



பின்னர் அவர்களது குடும்பத்தினருக்கு நம்பிக்கை தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து மருத்துவர்களிடம் சிறுவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். 

இச்சம்பவம் தொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் மூன்று தெருநாய்களை பிடித்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...