கோவையில் நண்பர்களிடையே குடிபோதையில் தகராறு - அரிவாளால் வெட்டியதில் ஒருவர் படுகாயம்!

கோவை சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் நண்பர்கள் இருவருக்கு இடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் கோபிநாத் என்பவர் வெட்டியதில் அழகர்சாமி படுகாயமடைந்தார். இது தொடர்பாக கோபிநாத்தை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டியதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாயி என்கிற அழகர் சாமி. இவர் கார் வாட்டர் வாஷ் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் கோழி என்கிற கோபிநாத் இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

இவர்கள் இருவரும் நேற்று அங்குள்ள ஒரு மதுபான பாரில் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோபிநாத், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அழகர்சாமியை தலையில் வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கோபிநாத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். தகவலறிந்த துடியலூர் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அழகர்சாமியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...