கோவை அருகே காதலன் கொலை - காதலி தூக்கிட்டு தற்கொலை!

கோவை செட்டிப்பாளையம் அருகே கடந்த 5ஆம் தேதி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறச் சென்ற காதலனை, பெண்ணின் உறவினர் வெட்டிக்கொலை செய்த நிலையில், தனது கண்முன்னே காதலன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் விரக்தியடைந்த காதலி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



கோவை: கோவை சுந்தராபுரம் அருகே காதலன் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (21) இவர் செட்டிபாளையம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த தன்யா (20) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி தன்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூற அவரது வீட்டிற்குச் சென்ற பிரசாந்தை தன்யாவின் உறவினரான விக்னேஷ் (29), என்பவர் வெட்டிக்கொலை செய்தார். 

இதையடுத்து கொலை செய்த விக்னேஷை செட்டிபாளையம் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் 3 ஆண்டுகளாக பிரசாந்த் மற்றும் தன்யா இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் இருவர் மட்டும் தனியாக சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 

இதையடுத்து பெரியோர்கள் முன்னிலையில் அடுத்த மாதம் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், பிரசாந்த் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த தன்யா மறுநாள் இரவு திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் தன்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் வீடு திரும்பினார். 



இந்நிலையில் காதலி கண்முன்னே, காதலன் வெட்டி கொலை செய்யப்பட்டதால் விரக்தியடைந்த காதலி தன்யா நேற்று மாலை 3 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக செட்டிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...