ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரி விவசாயிகள் நடைபயணம்!

கோவை - திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரி பல்லடம் அருள்புரத்தில் இருந்து உடுமலைப்பேட்டை வரை 55 கிலோ மீட்டர் மூன்று நாள் விவசாயிகள் நடைபயணத்தை கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரி விவசாயிகள் மேற்கொள்ளும் 55 கிலோ மீட்டர் நடைபயணத்தை கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் தொடங்கி வைத்தார்.



கோவை - திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் ஆனைமலை நல்லாறு என்ற இடத்தில் அணையை கட்டி நீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக திட்ட வரைவு கொடுக்கப்பட்டு, ஆட்சி மாறியதும் மீண்டும் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 



இந்த திட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றக் கோரி இன்று பல்லடம் அருகே அருள்புரத்தில் இருந்து "நம்ம நல்லாறு" என்ற நடைபயணத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடங்கியுள்ளனர். 



கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நடைபயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். 



இத்திட்டத்தை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோஷங்கள் எழுப்பியவாறு அருள்புரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கி உள்ளனர். 



பல்லடம், கேத்தனூர், குடிமங்கலம் வழியாக மூன்று நாட்கள் இந்த நடைபயணத்தை மேற்கொண்டு உடுமலைப்பேட்டையில் நடைபயணத்தை முடிக்க உள்ளனர். 

இந்த நிகழ்வை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கோவை எம்பி பி.ஆர்.நடராஜன் பேசியதாவது, 



தமிழக முதல்வர் உடனடியாக கேரள அரசிடம் பேசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தும் வகையில் இந்த நடைபயணத்தை தொடங்கி உள்ளோம் என்றார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...