ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரி விவசாயிகள் நடைபயணம்!

கோவை - திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரி பல்லடம் அருள்புரத்தில் இருந்து உடுமலைப்பேட்டை வரை 55 கிலோ மீட்டர் மூன்று நாள் விவசாயிகள் நடைபயணத்தை கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரி விவசாயிகள் மேற்கொள்ளும் 55 கிலோ மீட்டர் நடைபயணத்தை கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் தொடங்கி வைத்தார்.



கோவை - திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் ஆனைமலை நல்லாறு என்ற இடத்தில் அணையை கட்டி நீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக திட்ட வரைவு கொடுக்கப்பட்டு, ஆட்சி மாறியதும் மீண்டும் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 



இந்த திட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றக் கோரி இன்று பல்லடம் அருகே அருள்புரத்தில் இருந்து "நம்ம நல்லாறு" என்ற நடைபயணத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடங்கியுள்ளனர். 



கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நடைபயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். 



இத்திட்டத்தை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோஷங்கள் எழுப்பியவாறு அருள்புரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கி உள்ளனர். 



பல்லடம், கேத்தனூர், குடிமங்கலம் வழியாக மூன்று நாட்கள் இந்த நடைபயணத்தை மேற்கொண்டு உடுமலைப்பேட்டையில் நடைபயணத்தை முடிக்க உள்ளனர். 

இந்த நிகழ்வை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கோவை எம்பி பி.ஆர்.நடராஜன் பேசியதாவது, 



தமிழக முதல்வர் உடனடியாக கேரள அரசிடம் பேசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தும் வகையில் இந்த நடைபயணத்தை தொடங்கி உள்ளோம் என்றார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...