டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை - உலக அளவில் முதலிடத்தில் இந்தியா!

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்பான உலக தரவரிசை பட்டியலில் இந்தியா 8.95 கோடி பணப்பரிவர்த்தனையுடன் மற்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பிரேசிலும், 3வது இடத்தில் சீனாவும், 4வது இடத்தில் தாய்லாந்தும், 5வது இடத்தில் தென் கொரியாவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

டெல்லி: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உலக அளவிலான தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த உலகத் தரவரிசை பட்டியலில்  8.95 கோடி பணப்பரிவர்த்தனை என்ற அளவில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 29.2 மில்லியன் பரிவர்த்தனைகள் என்ற கணக்கில் பிரேசில் 2 ஆவது இடத்தையும், 17.6 மில்லியன் பரிவர்த்தனைகளுடன் சீனா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

மேலும், 16.5 மில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுடன் 4வது இடத்தில் தாய்லாந்து உள்ளது, அடுத்ததாக  8 மில்லியன் மதிப்புள்ள பரிவர்த்தனைகளுடன் தென் கொரியா 5வது இடத்தில் உள்ளது .

டிஜிட்டல் பணபரிமாற்ற முறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வரும் சூழலில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...