2 ஆண்டுகளில் டாஸ்மாக் வருமானமே ரூ.83,000 கோடி தான் - அன்புமணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!

கோவை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக்கில் இரண்டு ஆண்டுகளின் வருமானமே 83,000 கோடி தான், அதில் எப்படி இரண்டு லட்சம் கோடி இழப்பு ஆகும் என பாமக தலைவர் அன்புமணியின் கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார்.



கோவை: இரண்டு ஆண்டுகளில் டாஸ்மாக் வருமானமே 83 ஆயிரம் கோடி தான் அதற்குள் எப்படி 2 லட்சம் கோடி இழப்பாகும் அன்புமணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.



கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் ஆன சாலை பணிகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். 



இதை தொடர்ந்து, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த மார்க்கெட்டில் பணிகளை துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது, 







கோவை மாநகராட்சியின் பழுதடைந்த சாலைகளை மாற்றி, புதிய தார் சாலைகள் அமைக்க 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கி முதல்வர் அறிவித்துள்ளார். தொடர்ந்து, முதல்வர் உத்தரவின் பேரில் பல்வேறு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக நிறைவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு நடைமுறையில் வந்துள்ளன. 

இன்று புதிதாக முதல்வர் ஆணைக்கிணங்க ஏறத்தாழ 173 கிலோ மீட்டர் அளவிலான சாலை அமைக்கக்கூடிய பணிகளில் 71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக 200 கோடி ரூபாய் சிறப்பு நிதியும், முதல்வர் அறிவிப்பில் மேலும் 60 கோடி என, ஏறத்தாழ 260 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்து சாலை பணிகள் அமைக்கப்பட்டு கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார். 

578 கிலோமீட்டரில் சாலை அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும், அண்ணா மற்றும் எம்ஜிஆர் என இரண்டு மார்க்கெட் பகுதிகளிலும், பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 1157 ரோடுகள், 578 கிலோமீட்டர் 250 கோடி மாநகராட்சிகள் மட்டும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

நெடுஞ்சாலைதுறையை பொருத்தவரை 36 கிலோ மீட்டர் சாலை, 140 கோடி ரூபாய் மதிப்பில், இந்தப் பணிகள் இரண்டு மாதத்திற்குள் முடிக்கப்படும். மின்சார கட்டணம் குறித்த கேள்விக்கு மின்வாரியம் சார்பில் மிகத் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு எந்தவித மின் கட்டணம் உயர்வும் இல்லை.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள மின் திட்டங்கள் விசைத்தறி கைத்தறி வழங்கக்கூடிய இலவச மின்சாரங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என உறுதியும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான மாற்றங்கள் என்பது ஒன்றிய அரசு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு வலியுறுத்தி ஆண்டுக்கு ஏற்படுகின்ற செலவின் அடிப்படையில் இந்த கட்டண மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.



அமித்ஷா வரும்பொழுது மின் வெட்டு குறித்த கேள்விக்கு யார் குற்றச்சாட்டு சொன்னாலும் அப்படியே கேட்பார்கள், நீங்கள் பத்திரிக்கையாளர் தானே, பத்திரிகையாளர் மத்தியில் ஒரு விஷயத்தை, ஒரு குற்றச்சாட்டை கூறினால், அரசியலுக்காக, எதையோ மனதில் வைத்துக்கொண்டு கூறும் குற்றச்சாட்டு சரியா? தவறா? என ஆராய்ந்து பார்த்து செய்தி வெளியிட வேண்டும். 

மின் வெட்டு பாதிப்பு உள்ளதா? சென்னையில் நடைபெற்றது தற்செயலானது. துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாரை உடனடியாக 40 நிமிஷத்தில் சரி செய்யப்பட்டு சீரான மின் விநியோகம் தரப்பட்டது. பொதுவாகவே சென்னையில், கோவையில் சொல்லக்கூடிய கருத்து, குற்றச்சாட்டு சரியாக? தவறா? என ஆராய்ந்து பார்க்க வேண்டும். 

அன்புமணி, 2 லட்சம் கோடி டாஸ்மாக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஒரு வருடத்தில் விற்பனை 45 ஆயிரம் கோடி தான், இரண்டு வருஷத்தில் 83 ஆயிரம் கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. அப்படி இருக்கும் போது, இரண்டு லட்சம் கோடி இழப்பீடு எப்படி ஏற்பட்டது. அதையும் செய்திகளாக போடுகிறீர்கள். நீங்கள் அவர்களிடம் கேள்வி கேட்பதில்லை. புதிய தமிழகம் கிருஷ்ணசாமி நாடாளுமன்ற தேர்தல் வருவதை ஒட்டி எதை எதையோ கூறி வருகிறார். 

மழைக்காலங்களில் மாநகராட்சியை பொறுத்தவரை, மேயர் தலைமையில், ஆணையர், அதிகாரிகள் பல்வேறு காலகட்டங்களில் எந்தெந்த சிறப்பு பணிகள் செய்ய வேண்டும் என பட்டியலிட்டு செய்து வருகிறார்கள். உடனடியாக சிறப்பு கவனம் கொண்டு மேம்படுத்தப்படும், முன்பு இருந்த அளவுக்கு மழை பாதிப்பு இருக்காது.

வருமான வரித்துறை சோதனை குறித்த கேள்விக்கு, எங்க வீட்டுக்கு சோதனை செய்ய வரவில்லை. எங்களது உறவினர் வீட்டுக்கு வந்தார்கள். வருமான வரித்துறை சோதனையை பொறுத்த வரை, எந்தெந்த இடங்களுக்கு சென்றார்களோ, அங்கெல்லாம் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். என்ன ஆவணம் கேட்டார்களோ தாக்கல் செய்துள்ளோம். கூடுதல் ஆவணங்கள் கேட்டாலும் நாங்கள் தர தயாராக இருக்கிறோம். சோதனையை பொறுத்தவரை மிகத் தெளிவாக முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளோம்.

கோவை அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் மாற்று இடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கேள்விக்கு, அவர்கள் என்ன கேட்டார்கள் என்பதை அதிகாரியிடம் விளக்கம் கேட்டு என்னென்ன தேவைகள் கேட்டு சரி செய்யப்படும் வியாபாரிகளின் கோரிக்கை திராவிட மாடல் அரசு கணிவோடு பரிசளித்து நடவடிக்கை எடுக்கும்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...