பல்லடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு!

பல்லடம் அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் கடந்த மூன்று மாதமாக முறையான குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திருப்பூர் - மங்களம் சாலையில் காலி குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகே முறையான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் - மங்கலம் சாலையில் சுல்தான்பேட்டை பகுதி ஏ.டி காலனியில் கடந்த 3 மாதமாக குடிநீர் விநியோகம் செய்யாமல் அலட்சியம் காட்டுவதாகவும், மற்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறும் போது தங்களுக்கு உப்பு கலந்த நீரை மட்டுமே விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.



அதனை குடிநீராக பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வரும் அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் மங்கலம் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இந்த நிலையில் திருப்பூர் - மங்கலம் பிரதான சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மங்கலம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை எனவும் சீரமைப்பு பணிகள் விரைந்து நடைபெறுவதாகவும் ஓரிரு தினங்களில் குடிநீர் விநியோகம் துவங்கும் என உறுதி அளித்தனர்.

இதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...