கோவை சிங்கநல்லூரில் டாஸ்மாக்கை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

சிங்காநல்லூர் அடுத்த கமலா மில் குட்டை பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவில் அருகேயுள்ள டாஸ்மாக் கடையால் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள், டாஸ்மாக் கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சக்தி விநாயகர் கோவில் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்காநல்லூர் அடுத்த கமலா மில் குட்டை பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த அருகே சுமார் 20 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்துவிட்டு வரும் சிலர் கோவில் வாசலில் படுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

மேலும், கடை மூடினாலும் 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் அவ்வழியாக செல்வதாக கூறி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், இதுதொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும், உடனடியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...