கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு - 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை!

கடந்த 2018 ஆம் ஆண்டு பெரியார் சிலைகளை உடைப்போம் எனக்கூறிய எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய தபெதிக-வை சேர்ந்த கோபால், ஜீவானந்தம், கவுதம் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தலா ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ல், தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளை உடைப்போம் என பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் த.பெ.தி.க-வினர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் எச்.ராஜாவை கண்டித்து த.பெ.தி.க வை சேர்ந்த கோபால், ஜீவானந்தம், கவுதம் ஆகிய மூன்று பேரும் 2018 மார்ச் மாதம், கோவை வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.

இது தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் 3 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை மற்றும் ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சசிரேகா உத்தரவிட்டார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...