திருப்பூர் அருகே நிலத்தடி நீரில் சாயக்கழிவு கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்!

திருப்பூர் அடுத்த சொர்ணபுரி கார்டன் பகுதியில் ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து கிடைக்கும் நிலத்தடி நீரில் சாய கழிவுகள் கலந்து நிறம் மாறி வருவதாக கூறி, அப்பகுதி மக்கள் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் அடுத்த சொர்ணபுரி கார்டன் பகுதியில் நிலத்தடி நீரில் சாயக்கழிவு கலந்து. தண்ணீர் நிறம் மாறி வருவதாக பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் சொர்ணபுரி கார்டன் பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியை சுற்றிலும் ஏராளமான சாய ஆலைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆழ்துளை கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் நிறம் மாறி மாசடைந்து வருவதாக கூறப்படுகிறது. 

அந்த தண்ணீரை பயன்படுத்துவதால் தங்களுக்கும் குழந்தைகளுக்கும் தோல் அரிப்பு போன்ற உடல் நல கோளாறுகள் ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் கெடும் வகையில் சாய ஆலைகள் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 



இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, வருங்கால சந்ததியை பாதிக்கும் வகையில் நிலத்தடிநீரை கழிவாக மாற்றிய சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இந்நிலையில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மாசடைந்த நிலத்தடி நீரையும் பாட்டிலில் அடைத்து கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...