திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் - பரபரப்பு!

திருப்பூர் குமரன் சாலையில் சாலையை ஆக்கிரமித்து வணிக நிறுவனங்கள் அமைத்திருந்த விளம்பரப் பலகைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், அதனை அகற்ற அவகாசம் கொடுத்தும் அகற்றாததால், நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் குமரன் சாலையில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

திருப்பூர் குமரன் சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து விளம்பரப் பலகைகளை வைத்திருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.



இதனையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஏற்கனவே அவற்றை அப்புறப்படுத்த வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். 

காலக்கெடுவுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாததன் காரணமாக இன்று மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இணைந்து காவல்துறை பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்புகளை அப்புறபடுத்தி பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.



அப்புறப்படுத்தும் பணியின் போது, மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்ட போது வணிகர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...