கோவை அருகே பெண்ணிடம் 10.5 சவரன் நகை பறிப்பு - இளைஞர் கைது!

கோவை பீளமேடு அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் பொன்மணி (57) என்பவரது கடைக்கு வந்த நபர் பொருட்கள் வாங்குவது போல், பொன்மணியின் கழுத்தில் இருந்த 10.5 சவரன் நகையை பறித்து சென்ற நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை: பீளமேடு அருகே பேன்சி ஸ்டோர் உரிமையாளரின் கழுத்தில் இருந்த 10.5 சவரன் நகையை பறித்துச் செல்ல முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த கள்ளிமேடு வீதியை சேர்ந்தவர் பொன்மணி (57). வீட்டோடு இணைத்து ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வரும் இவர், நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் கடையை அடைக்கும் முன் மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.

அந்த மர்ம நபர், பொருட்கள் வாங்குவது போல வந்து பொன்மணியின் கழுத்தில் இருந்த 10.5 சவரன் தங்க நகை பறித்து தப்பி சென்றார். பொன்மணி கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தப்ப முயன்ற இளைஞரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் பீளமேடு பகுதியை சேர்ந்த அர்ஜுன் (38) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, பீளமேடு போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்,

இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...