திருப்பூர் மருத்துவமனை தேவைகள் குறித்து துணை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

பல்லடம் - திருச்சி ரோடு வனாலயம் அடிகளார் அரங்கத்தில் அரசு மருத்துவமனைக்கான தேவைகள் குறித்த ஆலோசனை கூட்டம் துணை ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில் துறையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மருத்துவமனைக்கான தேவைகளை பூர்த்தி செய்ய நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனைக்கான தேவைகளை பூர்த்தி செய்ய நிதியுதவி அளிப்பதாக தொழில் துறையினர், தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தலின்படி, துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில், ஆலோசனை கூட்டம் பல்லடம் - திருச்சி ரோடு வனாலயம் அடிகளார் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தொழில் துறையினர், தன்னார்வலர்கள், அரசு மருத்துவர்கள், மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற அரசு மருத்துவர்கள் மருத்துவமனையின் தேவைகள், பிரச்னைகள் குறித்து தெரியப்படுத்தினர். இதை கேட்டறிந்த துணை ஆட்சியர், தன்னார்வலர்கள், தொழில் துறையினருடன் இது குறித்து ஆலோசித்தார்.

இதையடுத்து, மருத்துவமனையில் நீண்ட நாட்களாக தேவைப்படும் 'ப்ரீசர் பாக்ஸ்'க்காக பத்து லட்சம் ரூபாய் வழங்க, கோடங்கிபாளையம் மற்றும் 63 வேலம்பாளையம் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முன்வந்தனர். 

இதேபோல், மருத்துவமனையின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற கறிக்கோழி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கவும் தீர்மானித்தனர்.



இந்த நிகழ்வில் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் கல்குவாரி உரிமையாளர்கள் சிவகுமார் சோமசுந்தரம் ஜவுளி உற்பத்தியாளர் முருகன், கறிக்கோழி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சுவாதி கண்ணன் மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள் சுந்தரராஜ் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...