திருப்பூர் மருத்துவமனை தேவைகள் குறித்து துணை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

பல்லடம் - திருச்சி ரோடு வனாலயம் அடிகளார் அரங்கத்தில் அரசு மருத்துவமனைக்கான தேவைகள் குறித்த ஆலோசனை கூட்டம் துணை ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில் துறையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மருத்துவமனைக்கான தேவைகளை பூர்த்தி செய்ய நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனைக்கான தேவைகளை பூர்த்தி செய்ய நிதியுதவி அளிப்பதாக தொழில் துறையினர், தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தலின்படி, துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில், ஆலோசனை கூட்டம் பல்லடம் - திருச்சி ரோடு வனாலயம் அடிகளார் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தொழில் துறையினர், தன்னார்வலர்கள், அரசு மருத்துவர்கள், மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற அரசு மருத்துவர்கள் மருத்துவமனையின் தேவைகள், பிரச்னைகள் குறித்து தெரியப்படுத்தினர். இதை கேட்டறிந்த துணை ஆட்சியர், தன்னார்வலர்கள், தொழில் துறையினருடன் இது குறித்து ஆலோசித்தார்.

இதையடுத்து, மருத்துவமனையில் நீண்ட நாட்களாக தேவைப்படும் 'ப்ரீசர் பாக்ஸ்'க்காக பத்து லட்சம் ரூபாய் வழங்க, கோடங்கிபாளையம் மற்றும் 63 வேலம்பாளையம் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முன்வந்தனர். 

இதேபோல், மருத்துவமனையின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற கறிக்கோழி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கவும் தீர்மானித்தனர்.



இந்த நிகழ்வில் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் கல்குவாரி உரிமையாளர்கள் சிவகுமார் சோமசுந்தரம் ஜவுளி உற்பத்தியாளர் முருகன், கறிக்கோழி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சுவாதி கண்ணன் மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள் சுந்தரராஜ் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...