கோவையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவை சேர்ந்தவர் தப்பியோட்டியதால் பரபரப்பு!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவை சேர்ந்தவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்ற நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பசி எடுப்பதாக கூறி காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தப்பியோடிய நிலையில், அவரை பிடித்து உணவு வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தினர்.



கோவை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவை சேர்ந்தவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்ற போது காவலர்களிடம் இருந்து தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ரஷ்யா நாட்டை சேர்ந்த நபர் போதை பொருள் வழக்கில் திருச்சி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, கோவையில் உள்ள இன்றியமையாத பண்டகங்கள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். 

நீதிமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணியளவில், பசிப்பதாக கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து திடீரென காவலர்களிடம் இருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. 



அவரை பின் தொடர்ந்த காவலர்கள் அவரை சமாதானம் செய்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கிக் கொடுத்து சமாதானம் படுத்தினர். 

இந்த சம்பவம் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...