கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - முதியவருக்கு 20 ஆண்டு சிறை!

கோவையில் கடைக்கு சென்ற 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கடையின் உரிமையாளரான கனகராஜ் (76) என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

கோவை: கோவையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 76 வயதான முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவையில் மோர் மிளகாய் வாங்க மளிகை கடைக்கு வந்த 10 வயது சிறுமியை, கடையின் உரிமையாளரான கனகராஜ் (76)  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடைக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகி வீட்டிற்கு வந்ததால், அதுகுறித்து விசாரித்தபோது நடந்ததை பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார்.

இதனையடுத்து, பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், கனகராஜை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கனகராஜூக்கு (76) 20 ஆண்டு சிறை தண்டனையும், 20ஆயிரம்  அபராதம் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம்  நிவாரணமாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...