வனத்துறை வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானை - கோவையில் பரபரப்பு!

கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த முகாசிமங்கலம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்டச் சென்ற வனத்துறை வாகனத்தை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வனத்துறை ஊழியர்கள் நூலிழையில் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே முகாமிட்டுள்ள யானையை விரட்ட சென்ற வனத்துறையினரின் வாகனத்தை காட்டு யானை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட ஆலாந்துறை அடுத்த கரடிமடை, நரசிபுரம் வழியாக ஒற்றை காட்டு யானை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல தனது வலசை பாதையில் சென்ற ஒற்றை காட்டு யானை ஆலாந்துறை முகாசிமங்கலம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்ததாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அங்கு வனத்துறையினர் விரைந்து சென்று டார்ச் விளக்கும், மற்றும் ரோந்து வாகனம் மூலம் கண்காணித்தனர். 



அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வெளியே வந்த காட்டு யானை அங்கு வந்த வனத்துறையினர் வாகனத்தை சேதப்படுத்தியது. 



இதில் வனத்துறையினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்நிலையில், வாகனத்தை விட்டு வெளியேறி தப்பிச்சென்ற வனத்துறையினர் மீண்டும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஒற்றை காட்டு யானை மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. பலத்த சேதமடைந்த வனத்துறையினர் வாகனம் அங்கிருந்து மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...