பாஜகவுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சூசகம்!

கோவையில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்களே சொல்கின்றனர். மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு சவாலாக இருப்பதால் இதுபோன்று பழிவாங்குகின்றனர். அவர்களுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை. நாங்கள் யாரென்று பாஜகவுக்கு முதல்வர் தெரியவைப்பார் என்றார்.



கோவை: பாஜகவுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை என்றும், நாங்கள் யாரென்று முதல்வர் பாஜகவுக்கு தெரியவைப்பார் எனவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.



கோவையில் ஹோப் கல்லூரி அருகிலுள்ள டைடல் பார்க்கை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, 







கோவைக்கு இன்னும் பல புதிய திட்டங்களை கொண்டு வர இருக்கிறோம். கோவையில் இன்னும் பல தொழில்கள் தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான நிலங்களை தேர்வு செய்து வருகிறோம். 

பிரபல லூலு நிறுவனத்தை தமிழகத்தில் நுழைய விட மாட்டேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்நிலையில் இன்று அந்த நிறுவனத்தை கோவையில் திறப்பது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் சொன்னார் நாங்கள் திறந்து வைக்கிறோம் என இதுபோன்று சிறுபிள்ளை தனமாக பேசுபவர்களுக்கு நான் பதிலளிக்க தேவையில்லை. 

மேலும் செந்தில்பாலாஜி கைது என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. பாஜக இதுபோன்று சிறுபிள்ளை தனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. திமுகவை பற்றி இன்னும் அவர்களுக்கு தெரியவில்லை. இது போன்ற பல முதலைகளை சந்தித்த இயக்கம் திமுக. 

இந்த அடக்குமுறையிலிருந்து மீண்டும் வலிமையோடு எழுந்து வெற்றி நடைபோடுவோம். திமுகவைக் அடக்க வேண்டுமென்று நினைத்தால் இன்னும் வேகமாக எழுவோம். இதுக்கெல்லாம் பயந்து போகின்ற இயக்கமில்லை. கைது நடவடிக்கையில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. 

பதவியில் இருக்கிறார்கள் என்று சிலர் ஆடுகின்றனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்களே சொல்கின்றனர். மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு சவாலாக இருக்கிறது என்பதால் அவர்களிடம் உள்ள துறையை ஏவிவிட்டு இது போன்று பழிவாங்குகின்றனர். அவர்களுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை. முதல்வர் நாங்கள் யாரென்று பாஜகவுக்கு தெரியவைப்பார். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....