கோவையில் காவல்துறை சார்பில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் - 83 மனுக்களுக்கு தீர்வு!

கோவையில் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் குறைதீர்ப்பு முகாமில் 85 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை நடத்தி 83 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.



கோவை: கோவையில் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் மக்கள் குறைதீர்ப்பு முகாமில் 83 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 

கோவை மாவட்ட காவல்நிலையங்களில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.



மேற்படி மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 



இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 85 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டும், 83 மனுக்கள் சுமூகமான முறையிலும் தீர்வு காணப்பட்டது. 



இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர். 

பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

பொது மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...