கோவை தெற்கு எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குள் புகுந்த நபர் உடலில் ஓம் சிவா என்ற பச்சை உள்ளது!

கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் 2 நாட்களுக்கு முன்பு புகுந்த மர்ம நபர் உள்பக்கமாக பூட்ட முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் வெளியில் அனுப்பியை நிலையில், அவர் பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலில் ஓம் சிவா என பச்சை குத்தியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.



கோவை: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர், தனது உடலில் ஓம் சிவா என பச்சை குத்தி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.



கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் கடந்த திங்கட்கிழமை இளைஞர் ஒருவர் புகுந்து உட்புறமாக பூட்ட முயன்றார். 



அவரை எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் உதவியாளர் விஜயன் என்பவர் அடித்து விரட்டினார். 



அதனை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே அண்ணா சிலை ஜி.டி.மியுசியம் அருகே அந்த நபர், அரசு பேருந்தின் பின்சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வானதி சீனிவாசன் சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்தது, தற்கொலை செய்து கொள்வது போன்ற சிசிடிவி காட்சிகள் அனைத்தும் காவல்துறையினரால் கைப்பற்றபட்டது.

இதனிடையே அலுவலகத்துக்குள் நுழைந்த நபர் யார் என்பது குறித்தும், என்ன நோக்கத்திற்காக நுழைந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தி இருந்தார். 



இந்நிலையில் இறந்த நபரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவர் தனது நெஞ்சில் ஓம் சிவா என பச்சை குத்தி இருப்பது தெரியவந்துள்ளது. அலுவலகத்துக்குள் நுழைந்த நபர் மலையாளத்தில் பேசினார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நபர் யார் என்பது குறித்து பந்தயசாலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...