கோவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் சிறுவன் வயிற்றில் வெடிகுண்டு கட்டிவைத்து உள்ளதாக மிரட்டல் விடுத்த போலி வெடிகுண்டு மிரட்டல் மன்னன் பீர்முகமது என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: கோவையில் சிறுவனின் வயிற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். 

கோவை மாவட்டம் பிள்ளையார்புரம் பகுதியில் வசிப்பவர் சுமதி. இவரது செல்போனை வாங்கிய ஒரு நபர், தன் மனைவிக்கு போன் பண்ண வேண்டும் என தெரிவித்திருக்கிறார். 

அப்பொழுது அந்த செல்போனை வாங்கி கோயம்புத்தூர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த அந்த நபர், தான் சிறுவனின் வயிற்றில் வெடி குண்டை கட்டி வைத்திருப்பதாகவும், இன்னும் சில நிமிடங்களில் வெடிக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்திருக்கின்றார்.

உடனடியாக மாநகர போலீசார் அந்த செல்போனுக்கு அழைத்து விவரங்களை கேட்டிருக்கின்றனர். அந்த செல்போனின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் சிறுவனின் வயிற்றில் வெடிகுண்டு கட்டி வைத்திருப்பதாக சொன்னது, பிரபல டுபாக்கூர் வெடிகுண்டு மிரட்டல் மன்னன் பச்சை மிளகாய் என்கிற பீர் முகமது என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து அவர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்று அதிகாலை கைது செய்தனர். மதுபோதையில் சுமதி என்ற பெண்ணிடம் இருந்து, அலைபேசியை வாங்கி மனைவிக்கு போன் செய்வதாக தெரிவித்துவிட்டு, போலீசாருக்கு போன் செய்து வெடிகுண்டு வைத்திருப்பதாக பீதியை கிளப்பி இருக்கும் பீர் முகமது, இவ்வாறு செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றார். 

கடந்த காலங்களில் இதேபோன்று பலமுறை காவல் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு போனில் அழைத்து வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அந்த வெடிகுண்டானது விரைவில் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடும் நபர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...