கோவை சுந்தராபுரத்தில் 10 வயதுடைய சந்தனமரம் வெட்டி கடத்தல்!

சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்த அனந்த பத்மநாபன் என்பவர் தனது வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வந்த சந்தன மரத்தை இரவோடு இரவாக மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சுந்தராபுரம் பகுதியில் வீட்டு வளாகத்தில் இருந்த 10 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த சந்தனமரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியை சேர்ந்த சுப்பிரமணிய சர்மா என்பவரது மகன் அனந்த பத்மநாதன் (45). இவர் ஐடி நிறுவனங்களுக்கு வன்பொருள் சப்ளை செய்யும் பணியை செய்து வருகிறார். இவரது வீட்டின் வளாகத்தில் தானாக வளர்த்த சுமார் 10 ஆண்டுகளான சந்தன மரத்தை பராமரித்து வந்தார்.



நேற்று இரவு 12 மணி வரை சந்தனமரம் இருந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு வழக்கம் போல எழுந்து பார்த்த போது, சந்தனமரம் வெட்டப்பட்டு அதன் நடுபகுதியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.



இதையடுத்து அனந்த பத்மநாதன் சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் சந்தனமரத்தை வெட்டி கடத்திச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...