தடாகம் அருகே ஆதரவற்ற முதியவரின் உடலை அடக்கம் செய்த போலீசார்!

கோவை தடாகம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த நாகேஷ் என்ற 60 வயது முதியவர் நேற்றைய தினம் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த நிலையில், அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், தடாகம் போலீசாரே உடலை அடக்கம் செய்துள்ளனர்.



கோவை: தடாகம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இறந்த ஆதரவற்ற நாகேஷ் என்ற முதியவரின் உடலை தடாகம் காவல்துறையினரே அடக்கம் செய்தனர்.

தர்மபுரி காரியாமங்களத்தைச் சேர்ந்தவர் 60 வயதான நாகேஷ். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக கோவை தடாகம் பகுதியில் வந்து தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நாகேஷ் வயது மூப்பின் காரணமாக இறந்துள்ளார். 

அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது சித்தாப்பா மகன் காளியப்பன் என்பவர் உடலை பெற்றுக் கொள்வதாகவும் ஆனால் அடக்கம் செய்ய பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.



இதையடுத்து தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளார் ஆறுமுக நயினார் மற்றும் காவலர்கள் கார்த்தி, முனியப்பன், பழனிசாமி ஆகியோர் அவர்களது சொந்த பணத்தில் பிரேத பரிசோதனை முடித்து ஜீவசாந்தி அறக்கட்டளை உதவியுடன் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...