துடியலூர் ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் - பொதுமக்கள் மறியல்!

கோவை துடியலூரில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் வாகனங்கள் அருகில் உள்ள சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: துடியலூரில் ஆர்.டி.ஓ.அலுவலகத்திற்கு வரும் வாகனங்கள் அருகில் உள்ள சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை துடியலூர் ரயில்வே கேட் அருகே வடக்கு வட்டார போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய வாகனங்கள் மற்றும் எப்.சி., காட்டுவது உள்ளிட்ட பணிகளுக்காக வரும் 4 சக்கர வாகனங்கள் வெள்ளக்கிணர் அடுத்துள்ள உருமாண்டம்பாளையம் சாலையில் நிறுத்தி பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பணிகளுக்கு வரும் வாகனங்கள் துடியலூர் ரயில்வே கேட் ஒட்டியுள்ள சாலையில் நிறுத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அவ்வழியை பயன்படுத்தி வரும் அருகில் உள்ள நகர் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து இச்சாலையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு கடிதம் எழுதி கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் இன்று அச்சாலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்கள் நிறுத்திருந்தனர். 



இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. 



இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் அங்கு வந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் முறையிட்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



தகவலறிந்து அங்கு வந்த துடியலூர் காவல் துறையினர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள உருமாண்டம்பாளையம் சாலைக்கு செல்லுமாறு கூறி அப்புறப்படுத்தினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...