உடுமலையில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்!

நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேரு வீதியில் உள்ள மகாத்மா காந்தி விடுதியில் பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், காந்தி ஆசிரமம் உண்டு உறைவிட பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.



திருப்பூர்: உடுமலையில் நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி சங்கர் ஆலோசனைப்படி உடுமலை நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேரு வீதியில் உள்ள மகாத்மா காந்தி விடுதியில் பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 



உடுமலை நகர பொறுப்பாளர், திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ராமன் தலைமையில் இந்த அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் காந்தி ஆசிரமம் உண்டு உறைவிட பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மகாத்மா காந்தி விடுதிக்கு 25 டம்ளர்கள் வழங்கப்பட்டது.

உடுமலை நகர செயலாளர் காஜா மைதீன், இணைச் செயலாளர் சையது இப்ராஹிம், உடுமலை ஒன்றிய தலைவர் அபுதாகிர், உடுமலை ஒன்றிய செயலாளர் முகமது அசாரூதீன், உடுமலை ஒன்றிய இணைச் செயலாளர் அக்பர் பாஷா, ஒன்றிய இணைத்தலைவர் ரியாஸ் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...