அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனரை சஸ்பெண்ட் செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

தனியார் ஆலைகளுக்கு ஆதரவாகவும், ஊழியர்களை ஒருமையில் நடத்தி வரும் உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குனர் சண்முகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: உடுமலை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குனரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 62 ஆண்டுகால பழமையான சர்க்கரை ஆலையாகும். இந்த நிலையில் தற்போது ஆலை மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் சர்க்கரை ஆலை மிக விரைவில் மூடப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. 



இந்நிலையில், ஊழியர்களை ஒருமையில் நடத்தி வரும் மேலாண் இயக்குனரை பணிநீக்கம் செய்யக்கோரி அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலகம் முன்பு கரும்புகளுடன் விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து, விவசாயிகள் விளைவித்த கரும்பை முழுமையாக அரவை செய்ய வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும், பதினைந்து நாட்களுக்குள் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். 



கூடுதலாக கரும்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும். பயிர் கடன் வழங்க வேண்டும். அமராவதி பிரதான கால்வாயில் கரும்பு பயிருக்கான உயிர் தண்ணீர் 21 நாட்களுக்கு விட வேண்டும், ஆலையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது மேலாண்மை இயக்குனரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...