கோவையில் வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!

மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சூர்யா (21) என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், கோவை மாவட்ட எஸ்.பி பரிந்துரையின்படி, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவின் பேரில், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.



கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சூர்யா (21) மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு வந்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலன் என்பவரது மகன் சூர்யாவை (21) காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கைது செய்யப்பட்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். 

இந்த உத்தரவின்படி வழிப்பறி வழக்கு குற்றவாளியான சூர்யா(21) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள சூர்யாவிடம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...