கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா பணியிடை நீக்கம்!

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்த நிலையில், அவரை தனியார் பேருந்து நிறுவனம் பணியிடை நீக்கம் செய்யதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



கோவை: கோவையின் முதல் பெண் ஓட்டுனர் ஷர்மிளா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா தனியார் ஓட்டுனராக பணியாற்றி வந்த நிலையில், அவரை தனியார் பேருந்து நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து ஷர்மிளா கூறியதாவது, 







காலையில் கனிமொழி எம்பி என்னை பார்ப்பதற்காக வந்து பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு தான் பேருந்தில் பயணம் மேற்கொண்டார், இந்நிலையில் பேருந்தில் இருந்த பெண் நடத்துனர் மனம் வருத்தப்படும்படி அவரிடம் பேசினார். அப்போது நான் அவரிடம் இவ்வாறு பேச வேண்டாம் என்று தெரிவித்தேன். 

இது குறித்து எனது முதலாளியிடம் தெரிவிக்கும்போது உனது பாப்புலாரிட்டிக்காக ஒவ்வொருவரையும் அழைத்து வருகிறாய் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. கனிமொழி பேருந்தில் வரும் விஷயமே தங்களுக்கு தெரியாது என்று முதலாளி கூறுகிறார் ஆனால் கனிமொழி வருவது குறித்து நான் ஏற்கனவே அவரிடமும் மேனேஜரிடமும் தெரிவித்திருந்தேன். 

இந்த வாக்குவாதம் நிகழும் போது எனது அப்பாவும் உடன் இருந்தார். அப்போது எனது அப்பா கோபத்தில் நான் பைத்தியக்காரனா என்று வார்த்தை விடவே ஓனர் உனது பிள்ளையை அழைத்துக் கொண்டு போ என்று எனது தந்தையிடம் கூறினார். எனவே நாங்கள் வருகிறோம் என்று கூறிவிட்டு வந்து விட்டோம். 

எப்போதும் எனக்கு ஆதரவாக பேசுபவர் இன்று எனக்கு எதிராக பேசியது மன வருத்தத்தை அளித்தது. வானதி சீனிவாசன் சொல்லாமலேயே வந்தார் ஆனால் கனிமொழி கூறிவிட்டு வந்தார். ஒரு ஓட்டுநரின் நிலைமை இதுதான் என்பதுதான் எனது மனதில் உறுத்தி கொண்டே இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...