துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளிருப்பு போராட்டம்


கோவை மாவட்ட தெற்கு மண்டலம் மற்றும் 76 முதல் 70 வரை உள்ள வார்டுகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களை அமைச்சர் பெயரைக் கூறிக் கொண்டு உதவி ஆணையர் ரவி மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) லோகநாதன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் தரக்குறைவாக நடத்துவதாக துப்புரவு தொழிலாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இதுபோன்று துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் உதவி ஆணையர் ரவி மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) லோகநாதன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகளைக் கண்டித்து மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த போராட்டத்தின் போது துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து மாநகராட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...