பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா விவகாரம் - தனியார் பேருந்து நிறுவன மேலாளர் ரகு கூறுவது என்ன?

பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, அவருடன் பெண் நடத்துனரை பணியமர்த்த வேண்டாம் என்று கூறியதாகவும், பெண் நடத்துனரை பணியமர்த்தியது பிடிக்காமல், தாமாக வந்து வேலை விட்டு செல்வதாக கூறினார் என தனியார் பேருந்து நிறுவன மேலாளர் ரகு தெரிவித்துள்ளார்.



கோவை: பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவை நாங்கள் சஸ்பெண்ட் செய்யவில்லை, அவராகவே தான் வேலையை விட்டு சென்றார் என தனியார் பேருந்து நிறுவன மேலாளர் ரகு தெரிவித்துள்ளார். 

பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா விவகாரம் குறித்து மேனேஜர் ரகு கூறியதாவது, 

மூன்று மாதமாக ஷர்மிளா பேருந்தை இயக்கி வருகிறார். வேலையில் எந்த பிரச்சனையும் இல்லை. மூன்று மாதத்திற்கு முன்பு ஒரு பெண் நடத்துனர் அவர்களாகவே வந்து சேர்ந்தார். ஷர்மிளா எந்த பெண் நடத்துனரையும் தன்னுடன் பணியில் அமர்த்த வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். 

அவர் ஓட்டும் பேருந்தில் ஒரு பெண் நடத்துனரை பணியில் அமர்த்தினேன். பெண் நடத்துனரை அமர்த்தினார் என் பாப்புலாரிட்டி போய்விடும் என என்னிடம் ஷர்மிளா பேசினார். அனைவருக்கும், வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அவரிடம் சொன்னேன். 

இதனையடுத்து, கடந்த வியாழக்கிழமை முதல் மூன்று நாட்கள் ஷர்மிளா வேலைக்கு வரவில்லை. காரணம் கேட்ட போது பெண் நடத்துனரை வேலைக்கு எடுத்ததால், அவர் கடந்த வியாழக்கிழமை பணிக்கு வரவில்லை என மற்ற பணியாளர்கள் என்னிடம் சொன்னார்கள். 

இன்று கனிமொழி எம்.பி. வந்ததால் அவர் பணிக்கு வந்தார். அவர் இறங்கியவுடன் ஷர்மிளாவும் இறங்கி விட்டார். ஷர்மிளாவின் புகழ் குறைந்து விடக்கூடாது என்பதால் பிரச்சனை செய்வதாக தெரிவித்தார்.

நான் வேறொரு ஓட்டுநரை அனுப்பி பேருந்து சோமனூர் போய்விட்டு திரும்பி வரும்போது ஷர்மிளா ஏறி அலுவலகம் வந்தார். வந்தவர் நான் வேலைக்கு வரலைன்னு சொல்லிட்டு போய்விட்டார். நாங்கள் வேலைக்கு வரவேண்டாம் என சொல்லவில்லை. அனைவருக்கும் சம வாய்ப்பு கொடுப்பது அவருக்கு பிடிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...