கோவை அருகே பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. தேக்குவட்டை பகுதியில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மஞ்சக்கண்டி பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது.



இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையிலும், பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதைத்தொடர்ந்து, கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த சூலூர் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் கீழ் பவானி பாசன விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும், பவானி ஆற்றை நம்பி தமிழகத்தில் செயல்படுத்தப்படும் 10-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற முடியாது எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக கோவை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சனை ஏற்படும் என கூறிய அவர்கள், இப்பிரச்சனையை மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

மேலும், இப்போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டுமெனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...