ராகல்பாவி அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!

உடுமலை அடுத்த ராகல்பாவி அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அடுத்த ராகல்பாவி அரசு துவக்கப்பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு ராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி செழியன் தலைமை வகித்தார். 



இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் பேசியதாவது, 2023- 24 ஆம் கல்வியாண்டில் அரசின் நலத்திட்டங்களான புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப் பை ஆகியவை பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டம் இந்த ஆண்டு முதல் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. 

பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டு விட்டனர். பள்ளி செல்லா குழந்தைகள் யாரேனும் நமது கிராமத்தில் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

நிறைவாக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஸ்ரீநிதி நன்றி கூறினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...