சமூக வலைதளத்தில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. குறித்து அவதூறு பரப்பிய இளைஞர் கைது

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கரும்புக்கடை திப்பு நகரை சேர்ந்த முகமது ஹாரீஸ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை கரும்புக்கடை அடுத்த அன்பு நகரை சேர்ந்தவர் ஜூபேர் அகமது (24). இவர் கரும்புக்கடை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தில் தொழில்நுட்ப பிரிவு கோவை மாவட்ட செயலாளராக உள்ளேன். 

எங்களது தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்காழியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது அவர் புகைப்படம் எடுத்து உள்ளார். 

அந்த புகைப்படத்தை கரும்புக்கடை திப்பு நகரை சேர்ந்த முகமது ஹாரீஸ் என்பவர் தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டு உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு போலீசார் அவதூறு பரப்பும் வகையில் புகைப்படத்தை பதிவிட்ட திப்பு நகரை சேர்ந்த முகமது ஹாரீஸ் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...