வால்பாறை எஸ்டேட் பகுதியில் சிறுத்தை புலி தாக்கி பசு மாடு பலி

வால்பாறை அடுத்துள்ள காஞ்சமலை எஸ்டேட் தெற்கு டிவிஷன் பகுதியில் செல்வி என்பவர் கால்நடை விலங்குகளான பசுமாடு உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார்.



இந்நிலையில், இவரது குடியிருப்பு பகுதியின் அருகாமையில் உள்ள புல்வெளிப் பகுதியில் இவர் வளர்த்துவந்த சுமார் 2 வயது மதிக்கத்தக்க பசுமாடு மேய்ந்துகொண்டிருந்த பொழுது அங்கு வந்த இரு சிறுத்தை புலிகள் பசுமாட்டின் கழுத்துப்பகுதியில் கடித்துக்குதறியது. இதில், பசு மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதனைக்கண்ட செல்வியின் மகன் கூச்சல் எழுப்பியதில் சிறுத்தைப்புலி அங்கிருந்து தப்பி அறுகாமையில் இருந்த புதர் பகுதிக்குள் ஓடியது.

இச்சம்பவம் குறித்து வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த பசுமாட்டினை உடற்கூறு பரிசோதனை செய்து செல்வியின் வீட்டின் முன்புறப் பகுதியிலேயே புதைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், எஸ்டேட் பகுதியில் காட்டுச்செடிகள் அடர்ந்து வளர்ந்திருப்பதினால் அப்பகுதியில் காட்டுவிலங்குகள் வருவது தெரிவதில்லை. ஆகவே புதர்ச் செடிகளை அகற்றுமாறு எஸ்டேட் நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறோம் என்றனர்.

இதேப் போல் வால்பாறை டவுன் பகுதியில் சிறுத்தை புலி தாக்கி எறுமைக் கன்றுக்குட்டி ஒன்று பலத்த காயம் ஏற்பட்டு அறுகாமையில் உள்ள கால்வாயில் விழுந்தது. நான்கு நாட்கள் கழித்து துர்ணாற்றம் வீசியதால் அறுகாமையில் உள்ள கடைக்காரர்கள் நகராட்சிக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வந்து சுமார் 2 வயது மதிக்கத்தக்க எறுமை கன்றுக்குட்டியின் சடலத்தை அகற்றினர்.



வால்பாறை குடியிருப்பு பகுதியில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை புலிகளை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...