வால்பாறை, நடுமலை எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

வால்பாறையை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையின் சுவர் மற்றும் கதவு, ஜன்னல் ஆகியவற்றை உடைத்து ஒற்றை காட்டு யானை அங்கு வைக்கப்பட்டிருந்த 2 மூட்டை அரிசியை தின்றது.



இச்சம்பவத்தினைக் கண்ட பொதுமக்கள் கூச்சல் எழுப்பியதைத் தொடர்ந்து, அந்த காட்டுயானை வால்பாறை ஐயப்பன் கோவில் பகுதியிக்கு சென்று நின்று கொண்டிருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் உதவியுடன் யானையை காட்டிற்குள் விரட்டினர்.



தொடர்ந்து வால்பாறைக்கு உட்பட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டு வருவதால், கும்கி யானைகளை வைத்து காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இதேப் போல் கடந்த இரு தினத்திற்கு முன்பு சின்கோனா எஸ்டேட் பகுதியில் காட்டுயானை கூட்டம் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அழகர்சாமி, ஏசையன், பழனிசாமி ஆகியோரது வீட்டின் முன்புறம் இருந்த தகர செட்டுகளை உடைத்தது. தொடர்ந்து காட்டு யானை பல்வேறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...