கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனருக்கு கார் வழங்கிய கமல்ஹாசன்!

கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுனரான ஷர்மிளா சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ஷர்மிளாவை நேரில் அழைத்து பாராட்டி, கமல் பண்பாட்டு மையம் சார்பில் புதிய கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.



கோவை: கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். 

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளாவின் துணிச்சலை கண்டு வியக்காதவர்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு கோவையில் மிகவும் பிரபலமானவர் ஷர்மிளா. தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்த இவரது வாகனத்தில் பயணிக்கும் பயணிகள், இவருக்கு ரசிகர்களாக மாறி செல்பி புகைப்படம் எடுத்து செல்வதுமாக இருந்து வந்தனர். 

இந்நிலையில் சமீபத்தில் இவரது பேருந்தில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பயணித்து விட்டு, பெண் ஒருவர் ஓட்டுனராக உள்ள பேருந்தில் பயணிப்பது பெருமையாக இருப்பதாக கூறி ஷர்மிளாவை பாராட்டிவிட்டு சென்றார். 

இதேபோல், திமுக துணை பொதுச்செயலாளரும். எம்.பியுமான கனிமொழியும் சமீபத்தில் அவரது பேருந்தில் பயணித்து விட்டு, அவரை பாராட்டி, கடிகாரம் ஒன்றையும் பரிசளித்து விட்டு சென்றார்.

இந்நிலையில், அவர் பணியாற்றி வந்த தனியார் பேருந்து நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்து விட்டதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் பேசு பொருளாக மாறியது. இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. 



இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன். ஷர்மிளாவை நேரில் அழைத்து பாராட்டி, அவரது கமல் பண்பாட்டு மையம் சார்பில், புதிய கார் ஒன்றையும் பரிசாக அளித்து, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...