கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனருக்கு கார் வழங்கிய கமல்ஹாசன்!

கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுனரான ஷர்மிளா சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ஷர்மிளாவை நேரில் அழைத்து பாராட்டி, கமல் பண்பாட்டு மையம் சார்பில் புதிய கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.



கோவை: கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். 

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளாவின் துணிச்சலை கண்டு வியக்காதவர்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு கோவையில் மிகவும் பிரபலமானவர் ஷர்மிளா. தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்த இவரது வாகனத்தில் பயணிக்கும் பயணிகள், இவருக்கு ரசிகர்களாக மாறி செல்பி புகைப்படம் எடுத்து செல்வதுமாக இருந்து வந்தனர். 

இந்நிலையில் சமீபத்தில் இவரது பேருந்தில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பயணித்து விட்டு, பெண் ஒருவர் ஓட்டுனராக உள்ள பேருந்தில் பயணிப்பது பெருமையாக இருப்பதாக கூறி ஷர்மிளாவை பாராட்டிவிட்டு சென்றார். 

இதேபோல், திமுக துணை பொதுச்செயலாளரும். எம்.பியுமான கனிமொழியும் சமீபத்தில் அவரது பேருந்தில் பயணித்து விட்டு, அவரை பாராட்டி, கடிகாரம் ஒன்றையும் பரிசளித்து விட்டு சென்றார்.

இந்நிலையில், அவர் பணியாற்றி வந்த தனியார் பேருந்து நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்து விட்டதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் பேசு பொருளாக மாறியது. இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. 



இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன். ஷர்மிளாவை நேரில் அழைத்து பாராட்டி, அவரது கமல் பண்பாட்டு மையம் சார்பில், புதிய கார் ஒன்றையும் பரிசாக அளித்து, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...