பக்ரீத் பண்டிகைக்காக பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் - விஷ்வ இந்து பரிஷத் மனு!

வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையின் பல்வேறு பகுதிகளில் இறைச்சிக்காக பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கோவை ஆட்சியர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



கோவை: கோவையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதை தடுக்க வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஆட்சியர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, வரும் ஜூன் 29ஆம் தேதி பகரீந்-ஐ முன்னிட்டு கோவையின் செல்வபுரம், உக்கடம், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இறைச்சிக்கான மாடுகள் பொது இடங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ளன, 

கடந்த வருடங்களில் இது போலவே அரசு அனுமதி பெற்ற இறைச்சி கூடங்களை தவிர்த்து பொது இடங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது. அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கால்நடை மருத்துவரின் சான்றிதழ், அரசால் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சி கூடங்கள் மட்டும் பபன்படுத்துவது போன்ற விதிகளை பின்பற்றாமல் தொடர்ந்து மாடுகள் வெட்ப்படுவதாக அறிகிறோம். 

எனவே இதுபோன்ற நிகழ்வுகள் இந்த வருடம் நடைபெறாமல் முன் கூட்டியே அரசும், காவல்துறையும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...