கோவையில் பள்ளி மாணவர்களின் மதநல்லிணக்க ஒருமை பயணத்தை துவங்கி வைத்த மாநகர காவல் ஆணையர்!

கோவை கோனியம்மன் கோவிலில் சாந்தி ஆசிரம், சமய நிறுவனங்கள், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான மதநல்லிணக்க ஒருமை பயணத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவங்கி வைத்தார்.



கோவை: கோவையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மதநல்லிணக்க ஒருமை பயணத்தை துவங்கி வைத்த மாநகர காவல் ஆணையர்

சாந்தி ஆசிரம், சமய நிறுவனங்கள், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்காக ஒருமை பயணத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஜூன் 21 நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஒற்றுமை பயணத்தில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பயணத்தை மிகச்சிறப்பான முறையில் துவங்கி வைத்தார். 

இந்த பயணத்தில் 14 பள்ளிகளை சார்ந்த 70 குழந்தைகளும் 15 தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டனர்.

இந்த பயணமானது கோவை கோனியம்மன் கோவிலில் துவங்கி, குருத்வாரா சிங் சபா, அத்தார் ஜமாஅத் மஸ்ஜித், ஜெயின் கோயில், பிஷப் பேராலயத்திற்கும் மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். நிகழ்ச்சியின் நிறைவு போத்தனூர் காந்தி நினைவகத்தில் நிறைவடைந்தது. 

இந்த நிகழ்வில் மாணவர்களிடையே துவக்க உரையாற்றிய கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, 



உயிரினங்களுக்கு இடையே இருந்த ஒற்றுமைகளை ஆராய்ச்சி செய்த டார்வினின் உழைப்பு பரிமாண வளர்ச்சி கோட்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்தது. ஆனால் உயிரினங்களுக்கு இடையேயான வேற்றுமைகளை ஆராய்ந்த கால்டனின் முடிவுகள் மனித இனத்தில் பிரிவினையை உண்டாக்கி பல போர்களுக்கு வழிவகுத்தது. 

எனவே நாம் அனைவரும் சமம். வேற்றுமைகளை புறந்தள்ளி ஒற்றுமைகளை அறிந்து கொண்டு மத நல்லிணக்கத்திற்கு வழிவகுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 



முன்னதாக சாந்தி ஆசிரமத்தின் இளைஞர் தலைமைப்பண்பு பகுதியின் தலைவர் விஜயராகவன் நிகழ்ச்சியின் வரவேற்புரையும் நோக்கங்களையும் எடுத்துக் கூறினார். 



நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பில் உறுதுணையாக ஜமாஅத் ஹி இஸ்லாமி ஹிந்த் செயலாளர் அப்துல் ஹக்கீம் பயணத்தில் கலந்து கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...