பல்லடத்தில் போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி - பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு!

உலக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், பல்லடத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: பல்லடத்தில் உலக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



பல்லடம் உட்கோட்ட காவல்துறை சார்பில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு "say no to drugs" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



இந்த பேரணியை பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் சவுமியா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். 



பல்லடம் நால்ரோடு பகுதியில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி, காந்தி ரோடு வழியாகச் சென்று அரசு கல்லூரி அருகே போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. 



இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். 

இந்த விழிப்புணர்வு பேரணியில், டாக்டர்கள் ராஜ்குமார், ராமசாமி, காவல் ஆய்வாளர்கள் மணிகண்டன், கோபாலகிருஷ்ணன், சரஸ்வதி, பர்வீனா பானு, மற்றும் போலீசார், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...