பீளமேடு அருகே மரக்கன்றுகளை நடவு செய்து இயற்கையை பாதுகாக்க உறுதிமொழி ஏற்ற ரயில்வே ஊழியர்கள்!

பீளமேடு அருகேயுள்ள வார்டு எண் 26-ல் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ரயில்வே ஊழியர்கள், இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில், ரயில்வே ஊழியர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



கோவை: பீளமேடு அருகேயுள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ரயில்வே ஊழியர்கள், இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

கோவை மாநகராட்சி வார்டு எண் 26-ல் பீளமேடு ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஏற்கனவே APJ அப்துல் கலாம் பூங்கா நிர்வாகிகள் சார்பில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது. 

இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி காலை 7 மணிக்கு ரயில்வே தலைவர் சுவாமிநாதன் தலைமையில் விஜயன் செல்வம், மகேஷ் ராஜராஜன் முன்னிலையில் ரயில்வே ஆய்வாளர் தங்கவேல் பீளமேடு ஸ்டேசன் மாஸ்டர் கோமதி ஆகியோர் பரிந்துரை பேரில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்றது. 



இந்த நிகழ்வில், மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, ஜி 18 ட்ரஸ்ட் பார்த்திபன் யோகராஜ், பீளமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் பூவே கோபால், வழக்கறிஞர் ஆனந்த், பொன்னுசாமி, சண்முகம், நந்தகோபால், சிவதாஸ், சக்திவேல், சந்திரிகா மற்றும் பள்ளி குழந்தைகள், பெரியவர்கள் நகர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு 150க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை நடவு செய்தனர்.

இதனையடுத்து அனைவரும் இயற்கையை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், குப்பையில்லா நகரத்தை உருவாக்க முயற்சி செய்ய குழு உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....