அரசின் சீரிய செயல்பாட்டின் காரணமாக நடப்பாண்டிற்கு ரூ.478.26 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

கோவை வணிகவரி அலுவலக கூட்டரங்கில் இன்று (6.03.2017) மண்டல அளவிலான வணிகவரித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் அமைச்சர் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தி மாநில அரசுக்கு வணிக வரிகள் மூலம் திரட்டப்படும் நிதி ஆதாரம் மிக முக்கியமானது மட்டுமல்ல, முதன்மையான ஆதாரமாகவும் திகழ்ந்திடும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் 2016- 2017 ஆம் நிதியாண்டில் ஜனவரி 2017 மாதம் வரை ரூ.3667.34 கோடிகள் மொத்த வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வரி 2015- 16ல் இதே காலத்தில் வசூலான ரூ.3189.08 கோடிகளுடன் ஒப்பிடும்போது ரூ.478.26 கோடிகள் கூடுதல் வருவாய் ஆகும். அதாவது 15 சதவிகிதம் வளர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளது.

2016-17 ஆம் நிதியாண்டில் நமூனாக்களை கூர்ந்தாய்வு செய்தல் மூலமாகவும், செயலாக்கப் பிரிவிலிருந்து பெறப்பட்டுள்ள கருத்துருக்களை செயல்படுத்துதல் மற்றும் பழைய வரி நிலுவைகளை வசூல் செய்தல் மூலமாகவும் வணிகவரித்துறை அலுவலர்கள் கூடுதல் முயற்சி எடுத்து வரிவருவாயைப் பெருக்கி அதிக வளர்ச்சி விகிதத்தினை எட்டவேண்டும்.

மொத்த வணிகர்கள் எண்ணிக்கையில் 87 சதவிகிதம் வணிகர்கள் நமூனாக்களை இணையம் மூலமாக தாக்கல் செய்துள்ளார்கள். மேலும் மொத்த வரி வருவாயில் 95 சதவிகிதத்திற்கு மேல் இணையம் மூலமாக பெறப்பட்டுள்ணளது.

வணிகவரித்துறையின் வரிவிதிப்பு மற்றும் செயலாக்கம் ஆகிய இரு பிரிவுகளும் போலிவணிகம் செய்பவர்கள் மீது ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கை எடுத்தும், தவறான உள்ளீட்டு வரிவரவு பெற்று பயனடைந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தும் வரிவருவாயினை அதிகப்படுத்த வேண்டும்.

மேலும், எதிர்மறை வளர்ச்சி மற்றும் குறைவான வளர்ச்சி அறியப்படும் வணிக இனங்களில் கூர்ந்தாய்வு செய்து காரணங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். துரித நடவடிக்கை மேற்கொண்டு நிலுவையிலுள்ள வரி வருவாயை வசூலிக்க வேண்டும். மேலும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அரசு வருவாயை பெருக்க வேண்டும்.

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஏழை எளிய மக்களுக்கான சிறப்புத் திட்டங்களுக்கு நமது துறையின் மூலம் கிடைக்கும் வரி வருவாய் முக்கியப்பங்காற்றுவதால் நமது துறையின் பணிகள் மிகவும் அர்பணிப்பு உணர்வோடு இருக்க வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வணிக வரித்துறை இணை ஆணையர்கள் ரஷ்மிசித்தார்த் ஜகடே, அனிஷ்சேகர், கூடுதல் ஆணையர்கள் ரத்தினசாமி, கர்வர்ஆலம் மற்றும் வணிகவரித்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...