கோவையில் பள்ளிவாசல்கள் முன்பு நிறுத்தப்பட்ட வாகனங்களில் போலீசார் வெடிகுண்டு சோதனை - பரபரப்பு!

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையில் உள்ள பள்ளிவாசல்களுக்கு அருகில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.



கோவை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள பள்ளிவாசல்களுக்கு அருகில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பள்ளிவாசல்கள் மற்றும் மைதானங்களில் திரளான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில் இந்திய ராணுவத்தினர் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் மாநகர காவல்துறை சார்பில் பள்ளிவாசல்கள் அருகே நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசார் நவீன கருவிகளை கொண்டு சோதனை மேற்கொண்டனர்.



மேலும் பள்ளிவாசல்கள் அருகே சந்தேகத்திற்கிடமாக வைக்கப்பட்டிருக்கும் பொருட்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...