கோவையில் பள்ளிவாசல்கள் முன்பு நிறுத்தப்பட்ட வாகனங்களில் போலீசார் வெடிகுண்டு சோதனை - பரபரப்பு!

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையில் உள்ள பள்ளிவாசல்களுக்கு அருகில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.



கோவை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள பள்ளிவாசல்களுக்கு அருகில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பள்ளிவாசல்கள் மற்றும் மைதானங்களில் திரளான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில் இந்திய ராணுவத்தினர் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் மாநகர காவல்துறை சார்பில் பள்ளிவாசல்கள் அருகே நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசார் நவீன கருவிகளை கொண்டு சோதனை மேற்கொண்டனர்.



மேலும் பள்ளிவாசல்கள் அருகே சந்தேகத்திற்கிடமாக வைக்கப்பட்டிருக்கும் பொருட்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...